உமக்காக ஏதாவதொன்றை நான்செய்திட
umakkaaga edhaavadhondrai naanjeydhida
உமக்காக ஏதாவதொன்றை நான்செய்திட வாஞ்சிக்கின்றேன் என் ஜீவனுள்ள நாட்களெல்லாம் உமக்காய் ஓட வாஞ்சிக்கின்றேன்
குயவன் கையில் களிமண்ணாய் என்னை முழுதும் தருகின்றேன் உமக்கு உகந்த பாத்திரமாய் வனைந்து கொள்ளும் தெய்வமே.
விடியல் காண காத்திருக்கும் ஜாமக்காரன் போல் நானும் உமது சித்தமே தெரிந்துக்கொள்ள உந்தன் சமூகத்தில் காத்திருப்பேன்.
கோதுமை மணிபோல் மடிந்திடுவேன் உமக்காய் தினமும் பலன்கொடுப்பேன் அவமானம்நிந்தைஎன்னும் சிலுவைதனை இயேசுவே உமக்காய் சுமந்திடுவேன்
எங்கே நான் போக உம் சித்தமோ அங்கே நீர் சொன்னால் சென்றிடுவேன் உமது ஊழியம் செய்துமுடிப்பேன் உமக்கு சாட்சியாய் வாழ்ந்திடுவேன்