உம் வசனம் என் கண்களை
um vasanam en kangalai
உம் வசனம் என் கண்களை திறந்திட்டதே உம் அன்பு என் உள்ளத்தை குளிர வைத்ததே உம் வசனம் என் கண்களை திறந்திட்டதே உம் அன்பு என் உள்ளத்தை குளிர வைத்ததே
பல்லவி
ஆஹா!! என்ன அன்பு இது, மனித அன்பு இல்லை இது எதிர்பார்க்காத அன்பு, என் இயேசுவின் அன்பு ஆஹா என்ன அன்பு இது, மனித அன்பு இல்லை இது எதிர்பார்க்காத அன்பு, என் இயேசுவின் அன்பு
எலியாவைப் போல் நான் சூரைச்செடியின் கீழ் கிடந்தேனே மனித பயத்தினால் அங்கும் இங்கும் அலைத்தேனே எலியாவைப் போல் நான் சூரைச்செடியின் கீழ் கிடந்தேனே மனித பயத்தினால் அங்கும் இங்கும் ஒளிந்தேனே
உம் அன்பிலே பயம் இல்லையே உம் அன்பினால் பெலன் கொண்டேனே…. உம் அன்பிலே பயம் இல்லையே உம் அன்பினால் பெலன் கொண்டேனே….
உதவாத பாத்திரம் என்று எல்லோராலும் நொறுக்கப்பட்டேன் உடைந்து போன எந்தன் வாழ்வை கன்மலையின் மேல் நிறுத்தினீரே உதவாத பாத்திரம் என்று எல்லோராலும் நொறுக்கப்பட்டேன் உடைந்து போன எந்தன் வாழ்வை கன்மலையின் மேல் நிறுத்தினீரே
உம் அன்பிலே பயம் இல்லையே உம் அன்பினால் பெலன் கொண்டேனே… உம் அன்பிலே பயம் இல்லையே உம் அன்பினால் உருவாக்கப்பட்டேன்…..
பல்லவி
ஆஹா!! என்ன அன்பு இது, மனித அன்பு இல்லை இது எதிர்பார்க்காத அன்பு, என் இயேசுவின் அன்பு ஆஹா என்ன அன்பு இது, மனித அன்பு இல்லை இது எதிர்பார்க்காத அன்பு, என் இயேசுவின் அன்பு