உம் சமுகம் வருகிறேன்
um samugam varugiren
உம் சமுகம் வருகிறேன் உம்மையே தொழுகிறேன் நீர் எந்தன் தெய்வமல்லவோ உம் பாதம் பணிந்து உம்மையே வணங்கி உன் புகழ் பாடுகிறேன்
1. காணாமல் போன என்னை தேடி வந்த தெய்வமல்லவோ கரம் பிடித்து என்னை உம் தோளில் வைத்து சுமந்து வந்த தெய்வமல்லவோ
2. அடிமையாய் இருந்த என்னை உயர்த்தின தெய்வமல்லவோ உம் கரம் விரித்து உம் மார்பில் என்னை அணைத்துக்கொண்ட தெய்வமல்லவோ
3. கண்ணீரின் பள்ளத்தாக்கிலே நான் நடந்த வேளையிலெல்லாம் கண்ணீர் துடைத்து நல் வழிகாட்டி நடத்தின தேவனல்லவோ