உம் ராஜ்யம் தேவனே
um raajyam devanae
1. உம் ராஜ்யம் தேவனே வரச் செய்தருளும் எம் பாவம் நீங்கவே செங்கோலை ஓச்சிடும்.
2. விரோதம் ஓயவே விண்ணிற்போல் மண்ணிலும் தூய்மையும் அன்புமே எப்போது செழிக்கும்?
3. உம் வாக்குக் கேற்றதாய் வன் பகை போர் நின்றே அநீதி முற்றுமாய் ஒழியும் நாள் என்றோ.
4. கர்த்தாவே எழும்பும் வாரும் உம் வன்மையால் நீர் வரத்தவித்தோம் தேற்றும் உம் காட்சியால்.
5. உம் தூய நாமத்தைத் தீயோர் பழிக்கின்றார் அன்பற்றுத் தீமையை வெட்காமல் செய்கின்றார்.
6. அநேக தேசத்தை அஞ்ஞானம் மூடிற்றே வீசும் விண்ஜோதியை மா விடி வெள்ளியே!