உலகத்தின் இராஜாவே
ulagathin iraajaavae
உலகத்தின் இராஜாவே தேவாதி தேவா உம் நாமம் போற்றி பாட என் நாவை வல்லமையால் நிரப்பும் ஸ்தோத்திரம் சொல்லி பாடி - இயேசுவை எந்நேரமும் துதிப்போம் அல்லேலூயா துதி சொல்லி - இயேசுவை என்றென்றும் ஆர்ப்பரிப்போம் அல்லேலூயா அல்லேலூயா
1. துதிகளின் நடுவினில் வாசம் செய்வார் துதிக்கின்ற உள்ளமதைதேடி வருவார் துதிகளை நாவினில் நிரம்ப செய்வார் ஸ்தோத்திர பலியினால் மகிமைபடுவார் இயேசுவின் நாமத்தை உயர்த்திடவே நாம் ஒருமித்து கூடிடுவோம்
2. துதி செய்யத்தானே நாமும் பிறந்தோம் இதை செய்ய ஏனோ தினமும் மறந்தோம் துதியுடன் இசையை முழுங்க செய்வோம் துதரை விட நாம் எழும்பி துதிப்போம் ஆர்ப்பரித்தே அவர் நாமத்தையே துதிபாடி கொண்டாடிடுவோம்
3. தேவனின் நாமம் மகிமைப்படவே ஸ்தோத்திரத்தாலே கிருபை பெருகும் உதடுகள் கனியே ஸ்தோத்திர பலியே உயிருள்ளவரையே நாவில் சொல்லியே நடனத்திலே புது பாட்டினிலே நாம் கர்த்தரை துதித்திடுவோம்