உலகத்தை உண்டாக்கி மனிதனை
ulagathai undaakki manidhanai
உலகத்தை உண்டாக்கி மனிதனை படைத்து உலாவ விட்டாரே உலாவ விட்ட ஆண்டவர் அவனுக்கு சுதந்திரம் கொடுத்தாரே சுதந்திரம் பெற்ற மனிதன் தன்னை பாவத்தில் அழிந்தானே பாவத்தில் அழிந்த மனிதனுக்காக இயேசு வந்தாரே -(2)
பல்லவி
இயேசுவே இரட்சகர் இயேசு ஆண்டவர்
மனிதன் தன் ஸ்தானத்தை விட்டு இறங்கி வருவானா ஆண்டவர் தம் மகிமை விட்டு பூமிக்கு வந்தாரே பூமிக்கு வந்த ஆண்டவர் தன்னை பலியாக கொடுத்தாரே பாவத்தில் இருந்து நம்மை எல்லாம் மீட்டு எடுத்தாரே
பல்லவி
இயேசுவே இரட்சகர் இயேசு ஆண்டவர்
பாவத்தில் இருந்து நம்மை மீட்ட இயேசு நல்லவர் அவர் வழியில் நடப்பவர்களுக்கு ஆக்கினி தீர்ப்பு இல்லை நித்திய ஜீவனை நமக்களித்த இயேசு நல்லவர் துதிகனமகிமை அனைத்தையுமே அவருக்கே செலுத்துவேம்
பல்லவி
இயேசுவே இரட்சகர் இயேசு ஆண்டவர்