உலகத் தோற்றம் முன்னென்னையும்
ulagath thotram munnennaiyum
உலகத் தோற்றம் முன்னென்னையும் உன்னத தேவனே தெரிந்தெடுத்தீரே என்னில் நீர் செய்திடும் கிரியைகளை நான் எண்ணியே மகிழ்ந்தும்மை துதிப்பேனே
1. மன்னா உம் தயை என்னில் பெரிதல்லோ என்னரும் துணையானீரே மறவேன் உன்னை நான் என்றுரை செய்தவா மாறா உம் அன்பால் நடத்தும்
2. இந்த வனாந்திர பாதையிலே இன்னல்கள் பலவாய் சூழ்ந்திட்ட வேளையில் இன்புறும் மொழியால் என்னையும் தேற்றியே இன்ப கரம் கொண்டு நடத்தினீர்
3. விலக்குவேன் உன் வியாதி என வாக்குரை செய்தெந்தன் வைத்யருமானீரே யேகோவா ரொஃபேக்கா நீர் என்றும் எனக்கு என்னில் உம் ஜீவனும் பெருகுதே
4. தேவா உம் ஆவியால் நடத்தியே தேவ புத்திரனாய் என்னையும் மாற்றினீர் மண்ணாம் என் சரீரம் மகிமை பெற்றுமே விண்சாயல் அடைய செய்திடுவீர்
5. ஆவியின் வரங்கள் நிறைந்தோராய் ஆண்டவர் இயேசுவில் பூரணராகி நாம் ஆவலுடனவர் வரவை நோக்கியே ஆமென்! எம் இயேசுவே வாருமென்போம்