துதிபாடுவேன் போற்றுவேன்
thudhibaaduven potruven
துதிபாடுவேன் போற்றுவேன் தூய தேவனை - அவர் அன்பினை புகழுவேன் அல்லேலூயா பாடுவேன்
முழு உள்ளத்தோடு நான் முழு பெலத்தோடு நான் முழு ஆத்துமாவோடு நான் முழு மனதோடு நான் என் இயேசுவை நான் பாடுவேன் என் ஜீவனை நான் போற்றுவேன் உயிருள்ளவரை நான் பாடுவேன்
காலை மாலையிலும் என் கர்த்தரை துதிப்பேன் நடு இரவினிலே விழித்து ஜெபித்து பாடுவேன் நான் பாடுவேன் என் நேசரை நான் தேடுவேன் என் ஜீவ காலம் முழுவதும்
துதி கனம் மகிமை செலுத்தியே பாடுவேன் தூய மனதுடன் புகழ்ந்து பாடுவேன் அவர் நாமத்தை நான் போற்றுவேன் அவர் அன்பிலே நான் வாழுவேன் என் ஜீவனுள்ள வரையில்