தூயாதி தூயரே துதிக்குப்
thooyaadhi thooyarae thudhikkup
தூயாதி தூயரே துதிக்குப் பாத்திரரே துதிக்கிறோம் உம்மையே முழு மனதோடே
1. கேருபீன்கள் சேராபீன்கள் ஓய்வில்லாமல் துதிக்கும் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே அனுதினம் அடியான் அகமகிழ்ந்தே நாம் அன்போடு பணிவோம் அவர் பாதம் வீழ்ந்தே
2. எரிகோவின் கோட்டையை இடிந்து வீழ்ந்ததுவே இஸ்ரவேலின் துதிகளின் ஒங்கிய சத்தத்தால் எதிர் வரும் தடைகளை தகர்த்தெரிய வீழ்த்துவோம் எண்ணில்லா துதிகளை ஓயாமல் செலுத்தி
3. இருள் சூழ்ந்த உலகில் இன்னல்கள் வந்தாலும் இறுதிவரை நாம் நிலைத்திருப்போமே மரணமே வந்தாலும் உண்மையை காத்து மகிழ்வுடன் பெறுவோம் ஜீவகிரீடமே
4. பலத்தினால் அல்ல பராக்கிரமத்தால் ஆவியினாலே ஆகும் என்றாரே அதினதின் காலத்தில் நேர்த்தியாய் நடக்கும் அமர்ந்திருந்து அவர் செயல்களை அறிவோம்
5. விசுவாச துரோகம் நேரிடும் காலம் விசுவாசம் தந்து விழித்திருப்போம் நாம் விரைந்து வரும் நம் இயேசு மணாளனே விண்ணிலே சந்திக்கும் காலமிதல்லவோ