தூய உள்ளங்களில் மகிழ்ந்தாடும்
thooya ullangalil magizhndhaadum
தூய உள்ளங்களில் மகிழ்ந்தாடும் ஆவியே உம்மை துதிபாடும் நாவில் துணையாக வாரும்
1. அன்று நீரோடை தனிலே அசைவாடி நின்றாய் இன்று புவியோர்கள் உள்ளத்தில் மகிழ்ந்தாட வந்தாய் நின்னருள் என்றும் நிதம் போற்றுவோம் (2) இந்த இருளான இதயத்தில் ஒளியாக வாரும்
2. அன்று மோசேயின் நாவில் வார்த்தையாய் நின்றாய் இன்று மூவரிலொன்றாய் எங்குமே திகழ்ந்தாய் மானிடர் பாவம் போக்கவே - இந்த (2) மண்ணில் மனுவாக வந்து மரணத்தை ஏற்றாய்
3. அன்று எலியாவின் இதயத்தில் ஒளியாக திகழ்ந்தாய் இன்று எளியோரின் உள்ளத்தில் மகிழ்ந்தாட வந்தாய் எங்கள் குறை தீர்க்க உமையழைத்தோம் (2) எங்கள் துயரான கண்ணீரைத் துடைத்திட வாரும்