தொலைந்து போன ஆட்டை
tholaindhu pona aattai
1.தொலைந்து போன ஆட்டைப் போலவே அலைந்த என்னை மீட்டுக்கொள்ளவே - 2 யாருண்டு என்ற கேள்வியின் பதிலாய் வந்தீரே நான் உண்டு என்று உயிரையும் ஈடாய் தந்தீரே - 2
கல்வாரியின் சிநேகம் போல் எங்கும் நான் கண்டதே இல்லை என் இயேசுவின் சிநேகம் போல் எங்கும் நான் கண்டதே இல்லை - 2
2.நான் கண்ட மேய்ப்பர்கள் வேறு உம்மிடம் கண்ட பாசமும் வேறு - 2 நல்ல மேய்ப்பனாய் என் வாழ்வினில் நீரே வந்தீரே ஜீவனும் எனக்குக் கொடுத்து அதை நிரூபணம் செய்தீரே - 2
3.குழியில் விழுந்த ஆட்டைத் தூக்கிட தயங்கியே சட்டம் ஏற்க மறுத்ததே குழியல் விழுந்த என்னைத் தூக்கிட தயங்கியே சட்டம் தனித்து விட்டதே - 2 திக்கற்ற என்னைத் தூக்கிட உம் முழுவதும் தந்தீரே நீர் எனக்காய் எதையும் செய்வீர் என்று சிலுவையும் உரைத்ததே - 2