தினம் தினம் உம்மை தேடுதே
thinam thinam ummai thedudhae
தினம் தினம் உம்மை தேடுதே என் இருதயம் என்றும் உறுதியாக சார்ந்து வாழ்ந்திருக்கும் பிழை ஆயிரம் இருந்தும் நிழல் தர மறுக்கவில்லை மறவாத மன்னனே பொறுத்தருள் புரிவீரே
அந்த வானம் தான் எனது எல்லை உம் அன்பிற்கு எல்லை இல்லை
1.குறை என்னில் பார்க்காத கருணை கண்கள் கொண்டவரே என்ன துதி செய்தாலும் அன்பிற்கோர் ஈடில்லையே தீராத தீமை எல்லாம் தீர்த்திடும் தேவன் நீரே பெரும் துயர் என்னை நெருங்க விடாமல் மாற்றிடும் தேவன் நீரே
2.உலகின் நிலை மாறினாலும் உமது நிலை மாறுமோ சூழ்நிலைகள் மாறினாலும் உமது அன்பு மாறாது எதிர்ப்போர்கள் எதிர்பார்க்கும் முடிவினை மாற்றியே நான் எதிர்பாரா மேன்மையை நீர் எனக்காய் அருளினீரே