தினம் அதிகாலையில் எழுந்திடுவேன்
thinam adhigaalaiyil ezhundhiduven
தினம் அதிகாலையில் எழுந்திடுவேன் தேவா உம் நாமத்தை துதித்திடுவேன்
1. வறண்ட தண்ணீரற்ற வானமிதிலே (2) வாஞ்சித்தே என் உள்ளம் உம்மை தேடுதே ஜீவனைப் பார்க்கிலும் உம் கிருபை (2) உயர்ந்தது உம்மை பாடி துதித்திடுவேன்
2. காலை தோறும் என்னை எழுப்பிவிடுவார் கல்வி மானின் நாவு தந்திடுவார் களைத்தோரைத் தேற்றிடும் உம் வாக்குகள் காத்திருந்தேன் தினம் பெற்றிடுவேன் - தினம்
3. கண்விழித்து என்னைக் காப்பவரே கரம் பிடித்தே என்றும் நடத்திடுவார் எனக்காக யாவையும் செய்தவரே என் இயேசு ராஜனை துதித்திடுவேன் - தின
4. தீமை நிறைந்த இப்பாரினிலே தினம் உந்தன் தயவால் வாழ்ந்திடுவேன் சீக்கிரம் வந்து என்னைச் சேர்த்திடும் சீயோனை வாஞ்சித்து நாடுகிறேன் - தினம்