தேசத்தின் எல்லையெங்கும்
thesathin ellaiyengum
தேசத்தின் எல்லையெங்கும் நாசகர் தொல்லைதர பாரத மண்ணில் அமைதி போனதே பேதையர் நம்மில் சிலர் பேதங்கள் பேசப் போக பாரம் போர்களம் போல் ஆனதே
கார்மேகக் கூட்டம் எல்லாம் மண்ணின் நிறம் பார்த்தா மழையை கொடுக்கும் பண்பாடும் குயிலின் இனமும் காசு வாங்கியா அழகாய் கூவும் மலர் கூட்டம், வேண்டிய மனிதர் என்று பார்த்திட்டா மணத்தை வீசும் மனிதன் மட்டும் தரம் பிரித்து ஏன் விருப்பு வெறுப்பினை காட்டிட வேண்டும்
அன்பு தேவை அன்பு தேவை அன்பு தெய்வத்தின் அனுபவம் தேவை அன்பின் தெய்வம் இயேசு தெய்வம் அனுக்கிரகம் இன்றே இந்தியத் தேவை
வந்தேமாதரம் சொல்லும்போது தேசிய ஒற்றுமை ஓங்குமே இயேசுவின் பாரதம் ஆகும்போது அன்பும் அமைதியும் தங்குமே
பிழைப்புக்காக மக்கட்குள்ளே பிளவை உண்டுபண்ணும் சிலரும் பதவிக்காக பிறரின் நலனை பலிகொடுக்கும் பாதகரும் புகழுக்காக எதையும் செய்யும் போலிக் கொள்கையோடு சிலரும் உணரும் வரை இந்தியாவின் ஒருமைப்பாடு கனவாய் இருக்கும்
மதங்கள் என்னும் பிரிவுகள் எல்லாம் மனிதன் தந்த பெயர்கள் தானே மனங்கள் அடையும் சுத்தம் ஒன்றே இறைவன் வேண்டும் மாற்றம் இன்றே உண்மையறியா பலரும் உண்டே உணருவாயோ தேவ ஜனமே இயேசு நாமம் அறிவிக்கவே முன் செல்வாயோ இளைஞனே - அன்பு தேவை