தேடி வந்த அன்பு தெய்வம்
thedi vandha anbu theyvam
தேடி வந்த அன்பு தெய்வம் இயேசு என்னை வாழ வைத்து அழகு பார்த்த இயேசு
என்னை விட்டுக்கொடுக்காதவர் என் கூடவே இருப்பவர் நன்மைகள் செய்பவர் அவர் ஒருவரே நல்லவர்
தாழ்வில் நினைத்தாரே என்னை பெயர் சொல்லி அழைத்தாரே பாழாய் போன எந்தன் வாழ்வை சீர்படுத்தினாரே ஒன்றும் இல்லா என்னை உயர்த்தி வைத்தாரே புதிய காரியம் எனக்காக என் வாழ்வில் செய்தாரே
இயேசுவின் காருண்யம் என்னை பெரியவனாக்கிடுமே பெரிய காரியம் என்னை கொண்டு செய்ய வைப்பாரே மலைகள் விலகினாலும் பர்வதம் பெயர்ந்து போனாலும் சின்னவனை ஆயிரமாக பெறுக செய்வாரே