தலை குனிந்த இடத்தினிலே
thalai kunindha idathinilae
தலை குனிந்த இடத்தினிலே தலை நிமிர செய்தவரே தடுமாறும் என் படகை தாங்கி பிடித்த நேசரே-2
என்னை உமக்காக இன்று தந்தேனே என் ஆயுள் உள்ளவரை முழுதும் தருவேனே-2
வந்தீரே அணைத்துக்கொள்ள தந்தேனே முழுவதுமாய் வருவீரே மீட்டுக்கொள்ள தருவேனே நிச்சயமாய்-2
1.வேரில்லா மரம் போல் ஆனேன் வேரூன்ற செய்தீரே கனிகளால் நிரப்பி என்னை கனி கொடுக்க வைத்தீரே-2-என்னை உமக்காக
உம்மை அல்லாமல் யார் உண்டு நீர் மட்டும் போதும் நான் வாழ்வதற்கு-2 என் பாசமும் நீரே என் சுவாசமும் நீரே நீர் வந்தாலே போதும் இயேசுவே-2
வந்தீரே அணைத்துக்கொள்ள தந்தேனே முழுவதுமாய் வருவீரே மீட்டுக்கொள்ள தருவேனே நிச்சயமாய்-4