தாவீதின் ஊரினிலே
thaaveedhin oorinilae
தாவீதின் ஊரினிலே தாழ்மையாய் பிறந்தவரே மனிதனை மீட்டிடவே மனுக்கோலம் ஏற்றவரே பாவங்கள் போக்க வந்த பரிசுத்த பாலகனே தொழுவத்தில் முன்னணை தான் உமக்கோ என் கோமகனே பாடூவேன் ஆராரிராரோ
கொண்டாட்டம் கொண்டாட்டம் கிறிஸ்து பிறந்த கொண்டாட்டம்
1. ஏசாயா வார்த்தைப்படி அவர் கன்னிமரியிடம் பிறப்பாராம் மரியாளும் கலங்கிடவே யோசேப்பும் திகைத்திடவே தூதரின் வார்த்தைப்படி யோசேப்பு நடந்திடவே சத்திரத்தில் உனக்கு இடமில்லையோ மாட்டிடை தான் இங்கு வீடானதே
முன்னணையில் தவழ ஆட்டு மந்தை மகிழ தாழ்மை கண்டு நெகிழ இவ்வுலகமே புகள கொண்டாட்டம் கொண்டாட்டம் கிறிஸ்து பிறந்த கொண்டாட்டம்
2. யூதரின் ராஜாவாம் அவர் எங்கே பிறந்தாராம், ஞானியரும் கேட்டிடவே ஏரோதும் கலங்கிடவே பாலகன் எங்கே பிறப்பாரோ !! பாதை சோல்வார் யார்யாரோ வானில் நட்சத்திரம் வந்து வழிகாட்டவே வான சாஸ்த்ரிகளும் அதன் பின் செல்லவே
வான தூதர் பாட கான மேய்ப்பர் ஆட வெள்ளி ஒன்று ஓட வான சாஸ்திரி தேட கொண்டாட்டம் கொண்டாட்டம் கிறிஸ்து பிறந்த கொண்டாட்டம்