சுவிசேஷகம் நான் அறிவிப்பது
suviseshagam naan arivippadhu
சுவிசேஷகம் நான் அறிவிப்பது என் சுயமான பெலனால் அல்ல என்னை மீட்டவர் என் அருள் இரட்சகர் எனக்களித்த தாலந்திது (2)
1. உற்சாகமாய் முழு தாகமாய் செய்கின்ற பணியுமிது (2) உலகெங்கும் அவர்க்காய் பணி செய்திட கொடுத்திட்ட தருணமிது (2)
2. அழிகின்றதே பெரும் மந்தைகள் அறிவிக்க வருவாரில்லை (2) தாகமுண்டோ நீ எழுந்தோடிடு பரிசுத்த ஆவி உண்டு (2)
3. பந்தயத்தில் ஓடும் இரதவீரர் நமக்கு பலனொன்று வருகின்றதே (2) அழியா கிரீடம் நான்(ம்) சூடிடுவேன்(வோம்) தேவா உம் கிருபை இது (2)