ஸ்தோத்திரம் இயேசு தேவா
sthothiram yesu devaa
ஸ்தோத்திரம், இயேசு தேவா! ஸ்தோத்திரம், நாதா! ஸ்தோத்திரம், தேவா!
1. அன்பும் அருளும் ஆழ்ந்த கிருபையும் என் போல் ஈனருக்காமோ? உன் போல் ஒருவரை உலகெங்கும் காணோம் தம்முயிர் தந்த தயாளா!
2. மீட்பின் செயலால் மீண்டும் பிறக்க ஆட்கொண்ட அருள் நிறை வேதா ! காட்டினர் கருணை கல்வாரி தனிலே நாட்டினர் என்னில் உம் அன்பை,
3. துன்மார்க்கம் நிறை துரோகியும் என நீர் நான் மார்க்கம் தனில் சேர்த்தீர், என் மார்க்கம் இனி இல்லையே ஏதும்; உன் மார்க்கம் ஒன்றே போதுமே.
4. இருள் தனை நீக்கி இதயத்தில் இருந்ததாம் மருள்தனை மாற்றிய மன்னன்! அருள் ஒளி வீச அகம் வந்த ராஜா திரு விழி திறந்த நாள் தியாகா!
5. இந்த பாக்கியம் இந்த இயேசுவே உந்தனுக்காகவே என் செய்வேன் ? தந்த உம் இரட்சிப்பின் பாத்திரம் கொண்டே எந்த நாளும் ஸ்தோத்தரிப்பேன்