சிலுவை சுமந்தது போதும்
siluvai sumandhadhu podhum
சிலுவைச் சுமந்தது போதும்-என் இயேசுவே சிந்தையில் இறங்கியே வாரும் மனந்திரும்பிடுவேன் இனி நானும்-உமது மலரடிக்கே திரும்ப வேணும்
வருத்தப்பட்டு நாம் பாரம் சுமப்பதை சகிக்காத மனம் உமக்கு-சிலுவையில் தொங்கிடும் உம்மை கண்டுமே மனம் திருந்தாத குணம் எமக்கு வாக்குத்தத்தம் தந்த தேவா-உமது வார்த்தைக்கு கீழ்ப்படிவேன்
சாத்தானின் சோதனைக்கு நீக்கியே-எம்மையும் உம் பிள்ளைகளாய் எண்ணியே மீளும் எம் கேடான குணத்தையே கண்டு-நீர் பாடுகள் பட்டது போதும்
வாடாத மலரான உமதுள்ளத்தை தேடாத பாவியெம்மைக் காரும்-முறை கேடான பாவியென உணர்ந்தோம் எம் தேவா நம் குறைதன்னைக் கேளும் யாரோடு நாம் சேர்ந்துகொள்வோம்-எங்கள் ஐயனே ஆறதலைத் தாரும்