சிலுவை மரத்திலே
siluvai marathilae
1. சிலுவை மரத்திலே கஸ்திபட்டீர் சிந்தி உன் உதிரத்தை இயேசுவே சிந்தையில் நினைந்து நீசன் என்னையும் சந்தித்தீர் கல்வாரியண்டையிலே
மாசில்லா அன்பே கல்வாரியின் அன்பே இயேசுவின் அன்பிதுவே நேசித்து தோஷியைத் தம்மைப்போலாக்கும் நேசரின் அன்பிதுவே
2. மாறாத பாவக்கறை போக்கவும் தீராத ராகங்கள் தீர்க்கும் பேரருள் ஊற்றாய் திறந்தார் விலாவை பேரன்பினாலே கொல்கொதாவிலே - மாசி
3. நேயனே உம் திருக்காயங்களால் தீயோனின் வினை தீர்த்தீரே வியாதியும் வேதனை சாபமும் மாய தூய தழும்புகள் ஏற்றவரே - மாசி
4. அந்த நிறை உந்தன் தேகமீந்தே அந்தோ ருசித்தீரே சாவினை. உந்தன் மரணத்தின் சாயல் தரித்தே இந்நிலம் நின்சுதராய் திகழ - மாசி
5. சந்தோஷத்தோடே சகித்தீர் எல்லா நிந்தைகள் பாடுகள் யாவுமே சாந்தமுள்ள தேவ ஆட்டுக்குட்டியே காந்தையாம் உம் சபையை நினைந்தோ - மாசி