சேனைகளின் கர்த்தர்
senaigalin karthar
சேனைகளின் கர்த்தர் நம்மோடிருக்கிறார் யாக்கோபின் தேவன் உயர்ந்த அடைக்கலம் அவர் சொல்ல எல்லாம் ஆகும் அவர் கட்டலையிட நிற்க்கும் – 2
தேவனால் எல்லாம் கூடும்-4
1.நான் கெம்பீரமாய் நடக்க என் பாதையை அகலமாக்கினீர் நான் விசாலத்தில் தங்கிட என் எல்லையை பெரிதாக்கினீர்-2 என்மேல் கிருபையாய் நீர் தந்த ஈவு அதிகாரமாய் பெருகிற்று-2
2. என் விருப்பங்கள் நிறைவேற்றிட நான் செய்வதை வாய்க்கச்செய்தீர் என் கனவுகள் நிறைவேறிட நீர் வாசலை திறந்து வைத்தீர்-2 எனக்கு முத்திரை மோதிரம் தந்து உங்க வார்த்தையை நிறைவேற்றினீர்- 2
3.நான் வாழ்ந்து செழித்திருக்க நீர் பொக்கிஷத்தை திறந்து வைத்தீர் நான் சிங்காசனத்தில் அமர நீர் எனக்காய் யுத்தம் செய்தீர்-2 எனக்கு எதிரான கையெழுத்தை முற்றிலும் குலைத்திட்டீர்-2