சீயோனில் நாதம்
seeyonil naadham
சீயோனில் நாதம் முழங்க சீயோன் ராஜா வருகின்றார்
அல்லேலூயா! அல்லேலூயா! மகிழ் கொண்டாடு பாடிடுவோம் அல்லேலூயா! அல்லேலூயா! காண்போம் நம் இயேசுவையே
1. கண்ணீர், கவலைகள், வேதனைகள் கர்த்தரை கண்டிட ஒழிந்திடும் நீங்கிவிடும் இகாமத் பாடுகளே நித்திய மகிமையை ஈந்திடுமே - சீயோனி
2. மண்ணில் ஜீவனை மாய்த்த சித்தர் பொன்னைப் போல் புடமிடப்பட்டவரே . விண்ணின் சாயல் நித்யம் தரித்தவராய் இயேசுவின் பொன்முகம் கண்டிடுவார் - சீயோனி
3. தேகத்தில் பாடுகள் வென்ற சித்தர் ஏகமாய் மறுரூபமாயிடுவார் யுகாயுகம் இயேசுவோடாளவே மேகமீதில் வேகம் பறந்திடுவார் - சீயோனி
4. ஜெயங்கொண்டார் சாலேமின் வீதிகளில் ஜெயதொனி கீதங்கள் முழக்கிடுவார் மகிமையின் கிரீடங்கள் சூடினோராய் மகிமாசனத்திலே வீற்றிடுவார் - சீயோனி,
5. சீயோனின் நற்பணி தீர்த்திடவே மகிமையின் கர்த்தர் வெளிப்படுவார் “ஆமென் கர்த்தாவே நீர் வாரும்" என்போம் ஆவலாய் இயேசுவை சந்திப்போமே - சீயோனி