சந்தோஷமாய் சங்கீதம் பாடுவோம்
sandhoshamaay sangeedham paaduvom
சந்தோஷமாய் சங்கீதம் பாடுவோம் ஜீவன் தந்த நல் மேய்ப்பனை பாடிடுவோம் மகிழ்ந்தாடிடுவோம் மீட்க வந்த இயேசு ராஜனை
எக்காளத்தோடும் கைத்தாளத்தோடும் ஏகமாய் துதித்திடுவோம் மாட்சிமை பொருந்திய மகத்துவத்திற்காய் வல்லவரை வாழ்த்திடுவோம்
உன்னதத்திலும் பூலோகத்திலும் உன்னதரை போற்றிடுவோம் சர்வத்தில் வல்லமை உடையவரை ஸ்வரங்களால் கீர்த்தனம் செய்வோம்
தம்புருவோடும் நடனத்தோடும் வீணையோடும் வாழ்த்திடுவோம் வனைந்திடும் குயவனாம் கர்த்தரையே பணிவுடன் தொழுதிடுவோம்
பர்வதங்களே பெருங்காற்றே துதியுடன் கொண்டாடுங்கள் நதிகளும் கைகொட்டி ஓடிடுமே நம் நாயகனை போற்றிடவே