சபையே ஓ சபையே
sabaiyae o sabaiyae
சபையே! ஓ சபையே! ஆதியில் கொண்ட அன்பேங்கே?
உன்னை இரத்தத்தாலே மீட்டுக்கொண்டேன் உன் காயமெல்லாம் ஆற்றிவிட்டேன் ஆனாலும் ஏனோ என் அன்பை மறந்தாய்?
1. பரிசுத்தமுள்ளவன் பரிசுத்தமாகட்டும் நீதியை செய்ய வேண்டுமே
2. திறப்பினில் நின்று சுவரை அடைக்கும் மனிதர்கள் எழும்பணுமே
இயேசுவே! எங்கள் இயேசுவே! என்னை முழுதும் தருகின்றேன்
உங்க இரத்தத்தாலே மீட்டுக் கொண்டீர் என் காயமெல்லாம் ஆற்றிவிட்டீர்
வாழ்நாட்கள் எல்லாம் உம் அன்பை மறவேன்