புறப்பட்டுப் போகக்கடவோம்
purappattup paeாkakkadavaeாm
புறப்பட்டுப் போகக்கடவோம் இயேசுவின் நிந்தையை சுமப்போம் பாளயத்தின் புறம்பே போவோம்.
தம்முடைய சொந்த ரத்தத்தால் ஜனத்தை பரிசுத்தம் செய்ய நகர வாசலுக்கு புறம்பே பாடுபட்ட யேகோவா அண்டைக்கு
கள்ளச் சகோதரர் த்ரோகம் செய்வார்கள் பொல்லாதவைகளை சுமத்திடுவார்கள் ஆவியின் கனியை மறுதலிப்பார்கள்
சன்பல்லா தொபியா சக்கந்தங்களையும் துன்புறுத்தும் தீய கேள்விகளையும் அன்பருடன் மா இன்பமாய் எற்போம்
ஸ்தேவான்மேல் விழுந்த கற்களை நினைத்து சீஷர்கள் அடைந்த வாதைகளை சிந்தித்து மோசங்கள் வரினும் பொறுமையாய் சகிப்போம்
நாளெல்லாம் நரரால் நசுக்கப்பட்டாலும் செருக்கானவரால் நெருக்கப்பட்டாலும் விக்கினங்கள் நம்மை வெகுவாய் சூழ்ந்தாலும்
வருத்தங்கள் வகை வகையாகவே வரும் திருத்தங்கள் சிலரால் பொருத்தமாய் சேரும் அடிக்கப்பட்ட ஆட்டுக் குட்டியை பார்த்தே
நடந்திடும் யுத்தம் யாவேயுடையதே அமர்ந்து அவரே தேவனென அறியுங்கள் ஸ்தோத்திர பலியை ஊக்கமாய்ச் செலுத்தி