புகழ்வோம் கர்த்தா நேச சுதன் யேசு
pugazhvom karthaa nesa sudhan yesu
1. புகழ்வோம் கர்த்தா நேச சுதன் யேசு மக்கட்காய் மாண்டு விண்டலம் சென்றனரே.
அல்லேலூயா! கனம் புகழ் அல்லேலூயா! உமக்கே அல்லேலூயா! எங்களுக்குப் புத்துயிர் தாருமே.
2. புகழ்வோம் கர்த்தா பரிசுத்த ஆவி மீட்பரைக் காண்பித்து இருள் போக்கினாரே.
3. சகல கனம் ஆட்டுக்குட்டிக்குத்தான் சர்வ பாவம் ஏற்று கறை நீக்கினாரே.
4. எல்லா மேன்மையும் கருணை கர்த்தருக்கு எம்மை வாங்கி தேடி நடத்துகின்றாரே.
5. உயிர்ப்பியுமே உம் அன்பால் நிரப்பும் உயர் அக்னியால் ஆத்துமா ஜூவாலிக்கட்டும்.