புது வாழ்வு வாழ்ந்திடுவேன்
pudhu vaazhvu vaazhndhiduven
புது வாழ்வு வாழ்ந்திடுவேன், ஜீவனுள்ள நாட்களெல்லாம் தேவனைப் பாடிடுவேன்.
1. தேவன் தந்த வார்த்தை இவன் வல்லமை தரும். எந்நாளும் அதை முற்றிலும் நம்பி நல்வாழ்வு வாழ்ந்திடுவேன்
2. இதயத்தில் விசுவாசிப்பதே என் வாயினால் அறிக்கை செய்வேன் முப்பது அறுபது நூறத்தனையாய் மகிழ்வோடு அறுத்திடுவேன்.
3. என் வாயின் வார்த்தைகள் என் இதயத்தின் தியானம், உந்தன் சமூகத்தில் உகந்ததாக எந்நாளும் காத்துக்கொள்வேன்,
4. என்னைப் பெலப்படுத்தும் என் இயேசுவால் யாவும் செய்வேன். எந்நாளும் வெற்றி நான் போற்றிடுவேன், இயேசுவின் நாமத்தில்.
5. என் தேவன் இவ்வாண்டிலே பெருங் காரியம் செய்திடுவார் என் மூலம் அவர் தம் நாமத்தை மகிமைப் படுத்திடுவார்.