புதிய கிருபைகள் தினம்
pudhiya kirubaigal thinam
புதிய கிருபைகள் தினம் தினம் தந்து என்னை நடத்தி செல்பவரே அனுதினமும் உம் கரம் நீட்டி என்னை ஆசீர்வதிப்பவரே
என் இயேசுவே உம்மை சொந்தமாக கொண்ட என் பாக்கியமே இதை விடவும் பெரியதான மேன்மை ஒன்றும் இல்லையே
நேர் வழியாய் என்னை நடத்தினீர் பாதையில் நடத்தினீர் காரியம் வாய்க்க செய்தீர் என்னை கண்மணி போல காத்திட்டீர்
பாதங்கள் சறுக்கின வேளையில் பதறாத கரம் நீட்டி தாங்கினீர் பாரமெல்லாம் நீக்கினீர் என்னை பாடி மகிழ வைத்தீர்