புதிய காரியம் செய்வேன்
pudhiya kaariyam seyven
புதிய காரியம் செய்வேன் என்றாரே அது இப்பொழுதே தோன்றும் என்றாரே வனாந்திரம் வயல்வெளி ஆகும் அவாந்திர வெளியில ஆறும் உண்டாக்குவேன் என்று சொன்னாரே
1.பட்சித்த வருஷத்தின் விளைச்சலை இரட்டிப்பாய் திரும்ப உனக்கு தந்திடுவார் பாழானதை பயிர் நிலமாய் மாற்றுவார் சந்தோசமும் மகிழ்ச்சியும் தந்திடுவார்
2.விழுந்து போன கூடாரத்த கட்டுவேன் சீர்படுத்தி ஸ்திரப் படுத்தி நடத்துவேன் வாசல்களின் தாழ்ப்பாழை பலப்படுத்தி உன் எல்லைகளை சமாதானம் ஆக்குவேன்
3.சிறியவன புழுதியில் இருந்து தூக்குவேன் ராஜரீக அபிஷேகத்தால் நிரப்புவேன் நீசனுக்கு முன்பாக நில்லாமல் ராஜாவுக்கு முன்பாக நிறுத்துவேன்