பெத்தலை யேகிய
pethalai yegiya
1. பெத்தலை யேகிய பாலகனேசுவே சத்திய திருவொளி இத்தனை வாழ்வினில் வீழ்ந்தவர் உயர இத்தரை உதித்தனர் இரட்சகராய்
அல்லேலூயா துதி சாற்றுவோம் தாவீதின் சேயனாம் இயேசுவுக்கே
2. ஏழ்மையின் கோலமாய் முன்னணையிருந்தோர் தாழ்மையின் உருவெடுத்தார் வாழ்விக்க நாரையும் தன் கிருபையால் பாழுலகம் நினைந்து இறங்கினாரே - அல்லே
3. பாவம் ரோகமும் சாவதே பயமும் யாவையும் தொலைத்திடவே மாமிசம் உதிரமும் கொண்டதோர் சுதனே மானிடர்க்காகவே பிணையானாரே - அல்லே
4. கன்னியில் வந்தார் எம்மையும் தமது கன்னிகை சபையதுவாய், கண்டிட ஆவியினால் அபிஷேகித்தே கொண்டிட வந்தனர் மணவாளியாய் - அல்லே
5. போற்றி பாடுவோம் பாலகனேசுவை ஏற்றுவோம் அவர் புகழ் நேற்றுமின்றென்றுமாய் நம்முடன் நிலைக்கும் உற்றதோர் இம்மானுவேலிவரே - அல்லே