பேரின்ப நதியே தாகத்தைத் தீர்த்திட
perinba nadhiyae thaagathaith theerthida
பேரின்ப நதியே தாகத்தைத் தீர்த்திட பின்மாரியாக பொழிந்திடுமே
1. எலியாவின் தேவன் எங்கே என்றானே சலியாமல் ஓடி சால்வை பெற்றானே பரலோக ராஜ்யம் பரிசுத்தவான்கள் பலவந்தமாக்கும் காலம் இதுவே
2. மங்கும் திரிகள் தெரிந்த நாணல் தேங்கும் தண்ணீர் கள் போன்ற அநேகர் அனலுமில்லாத குளிருமில்லாத அனுபவத்தோடு ஜீவிக்கிறாரே
3. சவுல் பவுலாய் மாற்றிடும் தேவா சடுதி ஒளியில் சந்திக்கும் மூவா உலரும் எலும்பும் உயிரை அடையும் உயிர்மீட்சி தாரும் என் இயேசு நாதா
4. பரிசுத்த ஆவி பெற்றிட வாரீர் பரிசுத்த தேவ அழைப்பை பாரீர் தேடுங்கள் கிடைக்கும் கேளுங்கள் தருவேன் தட்டுங்கள் திறப்பேன் என்றுரைத்தாரே
3. ஊனர் குருடர் தீரா நோயாளர் ஊமை செவிடன் பேயால் வாடுவோர் அற்புத செயலால் ஆரோக்கியமடைய ஆண்டவரிடமே வேண்டிடுவோமே
6. சத்திய பரனை பக்தியுடனே நித்திய சுகமாய் பாடிடுவேன் ஏதேனில் ஜீவ ஊற்றுகளருகே ஏழை என் தாகம் தீர்ந்திடுவேனே