பயிர் விளைந்ததே வேலையாட்களோ
payir vilaindhadhae velaiyaatkalo
பயிர் விளைந்ததே வேலையாட்களோ கொஞ்சம் பறந்த பாரத மண்ணில் வேலையாட்களோ கொஞ்சம்
1.இரட்சிப்பின் செய்தியை கேள்விப்படாதோர் இன்னமும் ஏராளம் ஏராளமே இரட்சகர் இயேசுவை அறிந்த நீயும் இன்னமும் தாமதம் செய்வதேனோ
2.கைகளின் கிரியையை கடவுளென செய்து காரிருள் வாழ்க்கை வாழும் கூட்டம் காணாத தெய்வமாம் இயேசுவையே கண்டிட துரிதமாய் செயல்படாயோ
3.ஆத்தும ஆதாயம் செய்திடவே ஆத்தும நேசரின் கரங்களிலே ஆயுள் முழுவதும் சேவை செய்ய அர்ப்பணம் செய்திட ஆயத்தமா