பரமன் இயேசு வாக்களித்தார்
paraman yesu vaakkalithaar
பரமன் இயேசு வாக்களித்தார் பற்றிக் கொள்ள தெரிந் தெடுத்தார்
ஆபத்தில் நானே உன்னுடனே இருந்து என்றும் விடுவிப்பேன் என்றவர் வாக்கு மாறிடாரே அவரின் வாக்கை பற்றிக் கொள்வாய்
தாய்மறந்தாலும் நான் மறவேன் என்றவர் இன்றும் ஜீவிப்பதால் சாத்தானின் எல்லா தீமைக்கும் விலக்கி உன்னை விடுவிப்பார்
துன்பங்கள் யாவும் பெருகினாலும் தொல்லைகள் உம்மை சூழ்ந்திட்டாலும் காத்திடும் தேவன் வல்லமையால் காத்திடுவாரே என்றென்றுமாய்
கலங்காதே திகையாதே என்றுரைத்த தேவனிவர் நம்பிக்கையில் உறுதியாய் நாதனை வாழ்வில் சேர்ந்திடுவாய்