பனி தூவிடும் இரவில்
pani thoovidum iravil
பனி தூவிடும் இரவில் கன்னி மைந்தனாய் புவிமீதினில் இயேசு பாலன் அவதரித்தார் அல்லேலூயா (4) வார்த்தை மாம்சம் ஆனாரே
1. அவர் நாமமே மிக அதிசயமாமே! ஆலோசனையின் கர்த்தர் என்றும் இவர் தானே! (2) அல்லேலூயா (4) வார்த்தை மாம்சம் ஆனாரே
2. ராஐன் தாவீதின் இன்ப சிங்காசனமே இவர்தாகுமே நித்திய ஆட்சி செய்வாரே (2) அல்லேலூயா (4) வார்த்தை மாம்சம் ஆனாரே
3. அவர் பெரியவர் அவர் உலக இரட்சகரே! அன்பு தேவனை நாமும் போற்றி துதிப்போமே! (2) அல்லேலூயா (4) வார்த்தை மாம்சம் ஆனாரே