பக்தரே வாரும் களிகூர்ந்து பாடி
paktharae vaarum kaligoorndhu paadi
1. பக்தரே வாரும் களிகூர்ந்து பாடி ஓ! பெத்லகேம் ஊருக்கு வாருங்கள் தூதரின் ராஜா மீட்பராய்ப் பிறந்தார். நமஸ்கிரிப்போமாக நமஸ்கிரிப்போமாக நமஸ்கிரிப்போமாகக் கர்த்தாவை.
2. மகத்துவ ராஜா! சேனையின் கர்த்தாவே அனாதி பிதா ஏக மைந்தனே முன்னணை தானோ உமக்கேற்கும் தொட்டில் நமஸ்கிரிப்போமாக நமஸ்கிரிப்போமாக நமஸ்கிரிப்போமாகக் கர்த்தாவை.
3. விண்மண்ணிலும் கர்த்தர் கனம்பெற்றோர் என்று தூதர்களே பாக்கியவான்களே ஏகமாய்ப் பாடி போற்றித் துதியுங்கள். நமஸ்கிரிப்போமாக நமஸ்கிரிப்போமாக நமஸ்கிரிப்போமாகக் கர்த்தாவை.
4. அநாதிப் பிதாவின் வார்த்தையான க்றிஸ்தே நீர் மாமிசமாகி இந்நாளிலே ஜென்மித்தீர் என்று உம்மை ஸ்தோத்திரிப்போம். நமஸ்கிரிப்போமாக நமஸ்கிரிப்போமாக நமஸ்கிரிப்போமாகக் கர்த்தாவை.