பாவியே ஜீவ ஊற்றண்டைவா
paaviyae jeeva ootrandaivaa
1. பாவியே ஜீவ ஊற்றண்டைவா மேவியே ஜீவனடைவாய் கூவியே இயேசு கூப்பிடுகிறார் தாவியே ஓடி நீ வா
தாமதமே செய்திடாதே தருணமே இதைவிடாதே தற்பரன் இயேசு உன்னை ரட்சிப்பார் அவர் பொற்பாதம் ஓடியே வா
2. உள்ள நிலைமையுடனோடி வா கள்ள உலகை விட்டு தள்ளமாட்டாரே எப்பாவியையும் வல்லயேசுநாதரே தாம்
3. வந்து நீ சொஸ்தமடைந்தேகொள் ஐந்து காயத்தழும்பால் நொந்தவன் சொந்தமாய் வரும்போது ஈந்தவரனுப்புவார்
4. பாவியொருவன் திரும்பும்போது மேவிகள் அவர் முன்னால் காவியங்கள் கொண்ட பாடல்களை கூவியே பாடிடுவார் - தாம
5.வாக்குத்தத்தங்களை செய்துள்ளவர் வாக்குத்தவறாதவர் போக்குச்சொல்லுகிறவர்களையே தாக்குமிடம் வைத்துள்ளார்
6.உண்மையாய் ஏசுவை ஏற்பவரை வெண்மையாக மாற்றுவார் நன்மையை நாடெங்கும் செய்திட்டவர் உன்னையும் அழைக்கிறார்
7.அல்லேலூயா கீதம் பாடிடுவாய் வல்ல ஆவியைப் பெற்று நல்லநாதர் இயேசுவை நாடினால் எல்லா ஈவுகள் கிட்டுமே