பாவி ஓடி வா உன் பாவப்பாரம் தாங்க
paavi odi vaa un paavappaaram thaanga
பாவி ஓடி வா உன் பாவப்பாரம் தாங்க யேசு பார்த்து நிற்கிறார் பரிதபித்து நிற்கிறார்.
1. தாமத மென்ன? உன் சுவாமி யேசு நாதரழைக்கும் சத்தம் யேளாயோ? அவர் தஞ்சம் தேடாயோ?
2. பின்னிடாதே நீ உன் தன்மை இன்ன தென்று அவர் முன்னறிவாரே தம் நன்மை ரூடவ்வாரே.
3. காலம் போகுது மாய்மாலம் செய்து வஞ்சியாமல் மந்தை சேர்ந்துகொள் கிறிஸ்தன்பைச் சார்ந்துகொள்.
4. தேவ பாலனாம் இம்மானுவேலரே உன் காவல் தேவை வேறென்ன? ஊன் ஆவல் வேறென்ன?
5. சுத்த ஜோதியே தம் ரத்தத்தாலே உன்னை மீட்கச் சித்தம் கொண்டிட்டார் ஆ சிலுவை தொங்கிட்டார்.
6. நொந்த பாவியே இவ்வந்தகார லோகந்தனில் தொந்தரை மெய்யே பல நிந்தைகள் மெய்யே.
7. ஜீவ அப்பம் நான் நீ தின்று மகிழ்கொண்டு ஜீவன் கண்டடை என்றார் என்னை வந்தடை என்றார்.