பாடு பாடென் கண்மணி
paadu paaden kanmani
பாடு பாடென் கண்மணி பரம மேய்ப்பன் தாள்பணி நீடு ஜீவ மேய்ச்சலை நேசமேய்ப்பன் ரூடவ்குவார்.
1. சின்ன ஆட்டுக் குட்டி நீ தேவன் என்னை மேய்க்கிறார் வன்ம ஓநாய் சீறியே வந்தும் ஓட்டிக் காக்கிறார்.
2. சோர்ந்த ஆட்டைத் தோளிலே சுமந்து கால் அயர்ந்ததை வாய்ந்த தம் மடியிலே வைத்து மேய்ப்பன் போகிறார்.
3. பால் சுமந்த மந்தையைப் பதனமாய் நடத்துவார் கால் முறிந்து நொந்ததைக் கட்டிச் சொஸ்தமாக்குவார்.
4. உங்கள் துயர் நீங்கத் தம் முடைய ஜீவனைத் தந்த தங்க மீட்பர் யேசு பொன் தாள் இறைஞ்சி முந்துங்கள்.