பாடிடுவோம் புதிய கீதம்
paadiduvom pudhiya geedham
பாடிடுவோம் புதிய கீதம் பாலகனின் உதிய கானம்
இரட்சகன் இயேசுவின் மெய் அன்பினை என்றென்றும் பாடிடுவோம்
வானிலே ராஜரிகம் என்றும் செய்பவர் கேருபீன்கள் மத்தியில் வீற்றிருப்பவர் பூமியின் குடிகளை தேற்றியே மீட்டிட பூவில் இன்று வந்துதித்தார் - பாடிடு
பாரிலே ஜீவ ஒளி வீசிடவே காரிருள் முற்றுமாய் விலகிடவே பேதைகள் ஞானமே பெற்றிட தோன்றிய தேவனை நாம் வாழ்த்திடுவோம்
நேற்றும் இன்றும் என்றுமே மாறாதவர் வாக்குமாறா வல்ல தேவன் நம் ஆண்டவர் தேற்றரவாளனாய் கன்னியின் மைந்தனாய் ஏழையாய் வந்துதித்தார்