ஓய்வு நாள் இது சபையே
oyvu naal idhu sabaiyae
ஓய்வு நாள் இது சபையே - தேவன் உவந்துனக் கருளினாரே.
ஆதலால் அவர் திரு ஆலயம் ஏகுவோம் வா திருச் சபையோரே.
1. புவி வான் உயிர் படைத்து தேவன் புகழோடு தொழில் முடித்து ஆறு தினம் சென்றேழினில் அமர்ந்தனர் ஆ! திருச் சபையோரே.
2. வேலை ஜோலிகள் நிறுத்தி நமது தேவனை முன்னிறுத்தி காலை மாலை தவறாது தேவாலயம் வருவீர் சபையோரே.
3. கர்த்தர் வசனம் கேட்டு அதைப் பத்திரம் அகம் வைத்து கற்பனை நான்கினில் கர்த்தருரைப்படி கா திருச்சபையோரே.