ஒவ்வொரு வருடமும் கிருபையாக
ovvoru varudamum kirubaiyaaga
பல்லவி
ஒவ்வொரு வருடமும் கிருபையாக கூட்டித் தருகின்றீர் ஒவ்வொரு நாளும் மகிமையாக நடத்தி வருகின்றீர்
சர்வ வல்லவரே சர்வ சிருஷ்டிகரே சர்வ வியாபகரே ஸ்தோத்திரம்
பல்லவி
ஒவ்வொரு வருடமும் கிருபையாக கூட்டித் தருகின்றீர் ஒவ்வொரு நாளும் மகிமையாக நடத்தி வருகின்றீர்
1. வேண்டிக் கொள்ளுமுன்னே என் தேவைகளை அறிந்து கொடுத்து உதவினேரே - 2 கலங்கிடாமலே கைவிடாமலே காத்து நடத்தின தேவன் நீரே. - 2
2. உம் வல்லகரம் என்னை தாங்கினதே சுமந்து ஏந்தி தப்புவித்ததே - 2 பயப்படாமலே திகைத்திடாமலே சகாயம் செய்த தேவன் நீரே - 2
3. சுகப்படுத்தினீரே பெலப்படுத்தினீரே திடப்படுத்தி என்னை நடத்தினீரே - 2 உம் தழும்புகளாலே, காயங்களாலே விடுதலை தந்த தேவன் நீரே - 2