ஒரு ரோஜா மலர்
oru rojaa malar
ஒரு ரோஜா மலர் இயேசு ராஜாவாக சாரோனின் ரோஜாமலர் இயேசு ராஜாவாக பெத்தலமில் பிறந்து விட்டார் - அதனால் எங்கள் உள்ளம் இன்பம் பொங்குதே.... எங்கள் இல்லம் மகிழ்ச்சி பொங்குதே....
1 முற்செடியில் அக்கினியாய் பூத்த மலரிது முற்கிரீடம் சுமந்து நம்மை காத்த மலரிது (2) இது வாடாமலர்.... வண்ணத்திலே தாமரை மலர் (2) என்றும் வாசனையே குறைந்திடாதவர்- தமது வார்த்தையினால் ஜீவன் தருபவர்-2
2 கண்ணீரைத் துடைக்க வந்த கருணைமலரிது தமது அன்பால் or (தமதன்பால்) கவர்ந்து கொள்ளும் காந்த மலரிது (2) இது வாடாமலர்.... வண்ணத்திலே தாமரைமலர் என்றும் வாசனையே குறைந்திடாதவர்- தமது வார்த்தையினால் ஜீவன் தருபவர்-2
3 பள்ளத்தாக்கில் பூத்துக் குலுங்கும் லீலிமலரிது. பாவசாபம் நீக்க வந்த சிலுவை மலரிது (2) இது வாடாமலர்.... வண்ணத்திலே தாமரை மலர் என்றும் வாசனையே குறைந்திடாதவர் தமது வார்த்தையினால் ஜீவன் தருபவர்
ஒரு ரோஜா மலர் இயேசு ராஜாவாக சாரோனின் ரோஜாமலர் இயேசு ராஜாவாக பெத்தலமில் பிறந்து விட்டார் (அனுபல்லவி) அதனால் எங்கள் உள்ளம் இன்பம் பொங்குதே.... அதனால் எங்கள் இல்லம் மகிழ்ச்சி பொங்குதே....