ஒரு போதும் மாறாத
oru podhum maaraadha
ஒரு போதும் மாறாத உம் மேலான அன்பு தன்னலம் காட்டாத அது சீரான அன்பு தாயினும் மேலான உம் தாராள அன்பு நீங்காமல் கண்மணி போல் காத்திடும் அன்பு இனம் புரியாத அன்பை என் மேல் வைத்தீங்க - 2
என்னை வியக்கதக்க விசித்திரமா நடத்துறீங்கப்பா - 4
கந்தை துணியே போல கசக்கி ஏறியபட்டவன் நான் காடி நீரை போல கசப்பாயி ருசிக்கப்பட்டவன் நான் -2 கழுதை என் மேல் நீர் ஏறி அமர்ந்த பின்னே கரடு முரடான பாதை நேராய் கண்டேன்
மந்தை மேய்த்த எனக்காய் உம் விண்ணை உதறி வந்தீர் சிந்தை உமக்கு என் மேல் அதனால் தன்னை தானே தந்தீர் - 2 கூரை என்னுள் நீர் குடிபுகுந்த பின்னே குறைவுகள் எல்லாம் என்னில் நிறைவானதாய் கண்டேன்