ஒரு நாளும் உம்மோடு பேசாமல்
oru naalum ummodu pesaamal
ஒரு நாளும் உம்மோடு பேசாமல் இருந்தால் என் ஜீவன்படுமே ஒரு பாடு இனம் புரியாத இன்பமே நீர் தான் அழியாத அன்பு நீர் தானே தேவா
இயேசுவே இயேசுவே இயேசுவே நீரே என் தேவன்
1.உம்மோடு இருந்தால் வருஷங்கள் எல்லாம் நிமிஷங்களாகும் என் இயேசுவே உம்மை விட்டு பிரியும் நாள் ஏதும் இருந்தால் என் உயிர் பிரியும் அந்நாளின் முன்னே
2.உம் முகம் ஒருநாள் நேரிலே காண்பேன் அந்நாளுக்காக ஏங்குகிறேன் மார்போடு சாய்ந்து முத்தங்கள் கொடுப்பீர் ஆயிரம் ஆசைகள் எனக்குள்ளே உண்டு
3. நீரின்றி எனக்கு யாருண்டு இயேசுவே உயிராய் நேசிக்க இவ்வுலகில் யாரை நான் நேசிப்பேன் உம்மையன்றி தெய்வமே உமக்காக தானே உயிர் வாழ்கிறேனே