ஒரு நாளும் எனை மறவா
oru naalum enai maravaa
ஒரு நாளும் எனை மறவா தெய்வம் நீரே நன்றியோடு உம்மைத் துதிக்கிறேன் (2) நன்றி இயேசுவே எந்நாளும் இயேசுவே (2)
1. வருடங்கள் காலங்களாய் என்னை வழுவாமல் காத்தீரையா (2) உம் வல்லக்கரத்தால் நீர் என்னைத் தாங்கினீர் உம் சிறகாலே மூடிக் காத்திட்டீர் (2)
2. வாக்குத்தத்தம் தந்தவரே உந்தன் வாக்கில் உண்மை உள்ளவரே (2) யார் மறந்தாலும் நான் மறவேனே என்ற வாக்கெனக்கு அளித்தவரே (2)
3. எதிர்காலம் உம் கையிலே எந்தன் பயம் யாவும் நீங்கியதே (2) நீரென் பக்கத்தில் நான் பயப்படேனே என் துணையாக இருக்கின்றீரே (2)
4.இயேசுவின் தழும்புகளால் -நான் குணமானேன் குணமானேனே நல்ல வைத்தியராய் நீர் என்னோடிருந்தீர் என் பெலவீனம் யாவும் நீக்கினீர்