ஒப்புவித்தேன் ஐயனே
oppuvithen aiyanae
ஒப்புவித்தேன் ஐயனே உம் சித்தம் செய்ய தந்தேனே முற்றிலுமாய் அர்ப்பணித்தேன் ஏற்றுகொள்ளும் இயேசுவே
சுட்டெரிக்கும் அக்கினியாய் சுத்திகரித்தென்னை மாற்றிடுமே ஆவி ஆத்துமா சரீரமே ஆத்தும நேசரே படைக்கிறேன்
கண்ணீர் கவலை பெருகுதே கர்த்தர் தம் வாக்காலே தேற்றிடுமே உலக ஸ்நேகம் பின்னே வைத்தே உறுதியாகப் பின் சென்றிட
அத்திமரம் துளிர்விடாமல் ஆஸ்திகள் யாவும் அழிந்திடினும் கர்த்தர் தம் அன்பை விட்டு நீங்கா தூய கிருபை தந்தருளும்
எந்தனின் சிந்தை முன்னறிவீர் எந்தனின் பாதை நீர் அறிவீர் நல்ல பாதை நடந்திட நாதனே என்னையும் அர்ப்பணித்தேன்
சோதனை எம்மை சூழ்ந்திடினும் சோர்ந்திடா உள்ளம் தந்தருளும் ஜீவகிரீடம் முன்னே வைத்தே ஜீவிய காலம் நடந்திட