ஓ பெத்லகேமே சிற்றூரே
o pethlagemae sitroorae
1. ஓ பெத்லகேமே சிற்றூரே என்னே உன் அமைதி! அயர்ந்து நித்திரை செய்கையில் ஊர்ந்திடும் வான்வெள்ளி விண்வாழ்வின் ஜோதி தோன்றிற்றே உன் வீதியில் நல்லோர் நாட்டம் பொல்லார் கோட்டம் உன் பாலன் யேசுவை.
2. கூறும் ஓ விடி வெள்ளிகாள்! இம்மைந்தன் ஜென்மமே விண் வேந்தர்க்கு மகிமையே பாரில் அமைதியாம்; மா திவ்ய பாலன் தோன்ற மண் மைந்தர் தூக்கத்தி;ல் விழித்திருக்க தூதரும் அன்போடு வானத்தில்.
3. அமைதியாய் அமைதியாய் விண் ரூடவ்வு தோன்றினார்; மாந்தர்க்கு ஸ்வாமி ஆசியும் அமைதியாய் ரூடவ்வார்; கேட்குதே அவர் வருகை இப்பாவ லோகில் மெய் பக்தர் ஏற்பார் ஸ்வாமியே தம் சாந்த ஆன்மாவில்.
4. வேண்ட நற் சிறு பாலரும் இத் தூய பாலனை அழைக்க ஏழை மாந்தரும் இக்கன்னி மைந்தனை விஸ்வாசமும் நம் பாசமும் வரவைப் பார்க்க இராவை நீக்கித் தோன்றுவார் இம்மாட்சி பாலனே.
5. பெத்லகேம் தூய பாலனே இறங்கி வருவீர் ஜெனிப்பீர் எங்களில் இன்றும் எம் பாவம் நீக்குவீர்; நற்செய்தி விழா தன்னில் இசைப்பார் தூதரே; ஆ வாரும் வந்து தங்கிடும் இம்மானுவேலரே.