ஓ எருசலேமியாரே
o erusalemiyaarae
1. ஓ, எருசலேமியாரே, விழியுங்கள், மெய்மார்க்கத்தாரே, இப்பாதி ராத்திரியிலே பத்தா வருவார்; சீராக எழுந்திருங்கள், புத்தியாக இருக்கும் கன்னிகள் எங்கே. தீவட்டிகளையே எடுத்தெதிர்கொண்டே போம் நேரமாம் என்றிரவில் அலங்கத்தில் நிற்பாரின் கூக்குரல் உண்டாம்
2. சீயோன் என்ற மணவாட்டி. மகா மன மகிழ்ச்சி காட்டி விழித்தெழுந்திருக்கிறாள், அவள் நேசர்மேன்மையோடும் சிநேகத்தோடுந் தயவோடும் வெளிப்படுகிறதினால் கிலேசம் நீங்கிற்று. ஆ, ஸ்வாமி, உமக்கு ஓசியன்னா அடியாரும் கம்பீரிக்கும் கதிக்கு வருவோம், கர்த்தா.
3. சுரமண்டலங்களாலும் நரர் தூதர் நாவினாலும் துதிக்கப்பட்டோர் தேவரீர்; மோட்ச ஊர் மகா மினுக்கு; நீர் எங்களை வானோர்களுக்கு உம்மாலே தோழராக்கினீர்; அவ்வாழ்வைக்கண்டோர்யார் காதாலே கேட்டோர் யார்; நாம் உன்னத சந்தோஷமும் மகிழ்ச்சியும் அடைகிறோம், அல்லேலூயா.