நூறு மடங்கு ஆசீர்வதிப்பவர்
nooru madangu aaseervadhippavar
நூறு மடங்கு ஆசீர்வதிப்பவர் -உன்னை கோடா கோடியாய் பெருகச் செய்வாரே சாபங்களை சுமந்து தீர்த்தவர் உந்தன் சாயலை மாற செய்வாரே
ஆர்ப்பரித்துப் பாடுவோம் இயேசு நாமமே உன்னதத்தின் மகிழ்ச்சியே என்னை நிரப்புமே
1. பட்டணத்தில் ஆசீர்வாதம் கிராமம் தோறும் ஆசீர்வாதம் கர்ப்ப பிறப்பில் ஆசீர்வாதம் ஆசீர்வாதமே உன் நிலத்தின் கனியில் ஆசீர்வாதம் என்றும் பெருமை
2. கர்த்தர் தந்த ஆசீர்வாதம் களஞ்சியத்தில் ஆசீர்வாதம் ஆவிக்குரிய ஆசீர்வாதம் ஆசீர்வாதமே வாக்கு தத்த ஆசீர்வாதம் என்றும் நிலைக்கும்
3. வானம் பூமி ஒழிந்து போகும் வார்த்தைகளோ என்றும் நிற்கும் தேவ கிருபை தினமும் நிரப்பும் தினமும் நிரப்பும் என்றும் தேவசித்தம் நிறைவேறும் உந்தன் வாழ்வில்